Sunday, June 14, 2009

நாஞ்சில் நாட்டு அவியல்

தேவையான பொருட்கள்:

* கத்தரிக்காய் - 2
* முருங்கக்காய் - 1
* சேனைக்கிழங்கு - ஒன்று சிறியது
* கொத்தவரங்காய் - 50 கிராம்
* வெள்ளரிக்காய் - ஒரு துண்டு
* தடியங்காய் - ஒரு துண்டு
* மாங்காய் - 1
* புளி, தயிர் - கொஞ்சம்
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* ------------------------
* அரைக்க:
* தேங்காய் - அரை மூடி
* பச்சை மிளகாய் - 10 நம்பர்
* சீரகம் - அரைத் தேக்கரண்டி
* சின்ன வெங்காயம் - 2


* காய்கறிகளை நன்றாக கழுவி நீளமாக வெட்டிக்கொள்ளவும். ஒரே அளவாக வெட்டிக் கொள்ளவும்.
* நறுக்கின காய்களை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு கறிவேப்பிலை சிறிது உப்பு போட்டு, தண்ணீர் கால் கப் அல்லது தயிர் அல்லது புளி போட்டு வேகவிடவும்.
* அரைக்க கொடுத்துள்ளவைகளை தேங்காயுடன் அரைக்கவும். விழுதாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
* இப்பொழுது காய்கள் நன்றாக வெந்து இருக்கும். அதனுடன் அரைத்தவற்றையும் கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்னெய் சேர்க்கவும். கெட்டியாக தண்ணீர் இல்லாமல் ஆனவுடன் இறக்கிவிடவும்.
* சுவையான நாஞ்சில் நாட்டு அவியல் ரெடி.

1 comment: